Tokyo Olympics: பதக்கத்தை நழுவவிட்ட குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த பூஜா ராணி காலிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் ஒலிம்பிக் பதக்கத்துக்கான வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.
குத்துசண்டை போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கத்தை குவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரேயொரு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தியா ஒலிம்பிக் பட்டியலில் 51 ஆவது இடத்தில் உள்ளது.
தமிழக அரசு 202 சிறப்பு ஆசிரியர்கள் ஜூன் மாத ஊதிய நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
இருப்பினும் மற்ற போட்டிகளில் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்புக்காக பலரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த பூஜா ராணி காலிறுதிச்சுற்றில் தோல்வியடைந்து பதக்கத்துக்கான வாய்ப்பை இழந்துள்ளார். இரண்டு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டியில், அல்ஜீரியாவை சேர்ந்த இச்ரக் சாயிப் என்பவரை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து சாதனை படைத்தார்.
TN Job “FB Group” Join Now
பின்னர் காலிறுதியில் சீனாவின் லீ கியானை எதிர்கொண்ட அவர், 5-0 என்ற கணக்கில் தோல்வியுற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளார். இந்திய வீராங்கனை பூஜா ராணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவுக்கான ஒலிம்பிக் பதக்கதை உறுதி செய்திருப்பார். என்றாலும் ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக அடியெடுத்து வைத்த அவர் பதக்கத்தை நெருங்கியுள்ளார் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.