தமிழக இளைஞர்களுக்கு இந்திய விமானப்படைப் பிரிவில் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு மூலம் தகுதியான ஆட்கள் மட்டும் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழக இளைஞர்களுக்கு இந்திய விமானப்படைப் பிரிவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணி காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த அறிக்கையை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு மூலம் தகுதியான ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த பணிக்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பில் உயிரியல்,இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 27.6.2002 முதல் 27.06.2006 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த பணிக்கான நேர்காணல் சென்னையில் வருகிற 01.02.2023 அன்று நடைபெற இருக்கிறது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.airmenselection.cdec.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம். இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.