இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனவால் பாதிப்பு – ஒரே நாளில் 553 பேர் பலி!
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 553 ஆக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பேரலையாக உருவான கொரோனா பெருந்தொற்று தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாத துவக்கத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 50 ஆயிரத்துக்கும் கீழாக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனால் கொரோனா காரணமாக மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு விமானங்கள் 65 % இருக்கைகளுடன் இயக்கம் – மத்திய அரசு அனுமதி!
இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று (ஜூலை 5) ஒரு நாளில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர் மற்றும் இறப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,703 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நேற்று ஒரு நாளில் 553 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,03,281 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 51,864 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,52,294 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,64,357 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 35,75,53,612 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.