உள்நாட்டு விமானங்கள் 65 % இருக்கைகளுடன் இயக்கம் – மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானங்களை, 65 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டுமாக இயக்க மத்திய அரசு தற்போது அனுமதி கொடுத்துள்ளது.
விமான இயக்கம்
கொரோனா வைரஸ் 2 ஆம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டு, மக்கள் வெளியே செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்துள்ளதால் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைப்பு – எல்.ஐ.சி பைனான்ஸ் திட்டம்!
அந்த வரிசையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததான மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு விமான சேவைகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக சர்வதேச விமான போக்குவரத்தானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதால் உள்நாட்டு விமான சேவைக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே 50% இருக்கை வசதிகளுடன் உள்நாட்டு விமானங்களை மீண்டுமாக இயக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், இவற்றை 65 சதவீத இருக்கை வசதிகளுடன் தற்போது இயக்கும் படி, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.