ரேஷனில் பொருள் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ் – கலப்பட பொருள்கள் கண்டுபிடிப்பு! அரசு தகவல்!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கடைகள்
இந்தியாவில் தற்போது ரேஷன் கடைகள் மூலமாகவே அரசின் நலத்திட்டங்கள் பல மக்களுக்கு சென்றடைகின்றது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மக்கள் எந்த இடத்தில் இருந்தும் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் திட்டம் அல்லது மானிய ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக பல மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Google நிறுவனமும் Blue டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வர போகிறதா? வெளியான அதிர்ச்சி தகவல்
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அரசு கடைகளை நடத்துபவர்கள் கலப்படம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலப்படத்தில் ஈடுபடுவோர் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு. மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் உத்திரபிரதேசத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள அரசு ரேஷன் கடைகளில் இருந்து கடந்த ஆண்டு 165356 ரேஷன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதில் 31592 மாதிரிகள் தோல்வியடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ரேஷன் பொருட்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் ரேஷன் கடைக்காரர்களால் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 26934 ரேஷன் மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில் அதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் மோசமாக இருப்பதாகவும், அதில் 118 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download