மே 1 முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. எனவே முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். மேலும் நேற்று மாலை நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே 45 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 25 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் – என்னென்ன கட்டுப்பாடுகள்?
தற்போது அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏற்கனவே 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.