இந்தியாவில் இதுவரை 1226 பேருக்கு கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 88 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது 2024 ஆம் ஆண்டிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 1226 பேருக்கு கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கொரோனா மரபியல் ஆய்வக கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பின் படி, கர்நாடகாவில் அதிகபட்சமாக 234 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து ஆந்திராவில் 189 பேர், மகாராஷ்டிராவில் 170 பேர், கேரளாவில் 156 பேர், மேற்கு வங்கத்தில் 96 பேர், கோவாவில் 90 பேர், தமிழகத்தில் 88 பேர், குஜராத்தில் 76 பேர், ராஜஸ்தானில் 37 பேர், தெலுங்கானாவில் 32 பேர், சத்தீஸ்கரில் 24 பேர், டெல்லியில் 16 பேர், உபியில் 7 பேர், ஹரியானாவில் 5 பேர், ஒடிசாவில் 3 பேர், உத்தரகண்ட், நாகாலாந்தில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
பள்ளி நேரம் மாற்றம் – ஜன. 25 வரை அமல்.. கடும் குளிர் எதிரொலி!