நாடு முழுவதும் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

0
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் தீவிரம்!!
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் தீவிரம்!!
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் 8 மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 60,000யை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நேரத்தில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களில் தினமும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84.5 சதவிகிதம் பேர் மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!!

அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 40,414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 5,21,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியை தாண்டிவிட்டது. தடுப்பூசி போட ஆரம்பித்து இதுவரை மொத்தம் 2,60,653 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!