இந்தியாவில் ஒரே நாளில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று – 219 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 219 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாட்களை விட இன்று பாதிப்புகள் குறைந்துள்ளது. இருந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமலில் வைக்க உத்தரவிட்டு வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் B.Ed படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு துவக்கம் – கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
தடுப்பு பணியின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் 2 தவணை செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 74,38,37,643 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 219 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 44,2874 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பினை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்துகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 97% உயிரிழப்பை தடுக்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கின்றது. அதனை தொடர்ந்து தொற்றில் இருந்து ஒரே நாளில் 37687 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,44,7032 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,42,69 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.