தமிழகத்தில் B.Ed படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு துவக்கம் – கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில், B.Ed படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று (செப்டம்பர் 13) முதல் துவங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
விண்ணப்பம் துவக்கம்
கொரோனா 2 ஆம் அலைத்தொற்று தமிழகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஆசிரியர் பணிக்கான தகுதியாக கருதப்படும் B.Ed படிப்புகளுக்கும் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் துவங்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன் கீழ் B.Ed படிப்புக்கான விண்ணப்பப்பதிவுகள் இன்று (செப்டம்பர் 13) முதல் துவங்க இருப்பதாகவும், மாணவர்கள் தங்களது விண்ணப்ப பதிவுகளை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 7 அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 13) முதல் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
இந்த விண்ணப்ப பதிவு செயல்முறை வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் B.Ed படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://tngasaedu.in & http://tngasaedu.org என்ற இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை செலுத்திக்கொள்ளலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.