1 முதல் 5ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு திரிபுரா மாநிலத்தில் இன்று (செப்டம்பர் 13) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தினசரி பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு தளர்வுகளில் கவனம் தேவை என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!
இதனிடையே 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 13 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொடக்க பள்ளி மாணவரக்ளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று மாநில தொடக்கக் கல்வித் துறை அறிவித்திருந்தது. முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று, மாநில அரசு கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களுடன் பள்ளிகளை மீண்டும் திறந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அதிமுக குற்றச்சாட்டு!
மாணவர்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இந்த மாணவர்களுக்கான இருக்கை ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் எந்த பள்ளிக்கும் போதிய இடவசதி இல்லையென்றால் தனித்தனியான ஷிப்டுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். முறையான சுகாதாரம், உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கை கழுவுதல் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் முகக்கவசங்களை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.