இந்தியாவில் ஒரே நாளில் 2,677 பேர் பலி – 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!!
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேர புதிய பாதிப்புகள், இறப்புகள் மற்றும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
கொரோனா நிலவரம்:
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்து மக்கள் சகஜ நிலை அடைந்து வரும் இவ்வேளையில் இந்த கொரோனாவின் மறு உருவமான இரண்டாவது அலை இந்த வருடத்தில் ஆரம்பித்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு – வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு!!
எதிர்பாராத விதமாக சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு மீண்டும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆரம்பத்தில் 4 லட்சத்தை தொட்டிருந்த தினசரி கொரோனா தொற்று தற்போது ஊரடங்கிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவித்தபடி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,14,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணிநேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,677 ஆக உள்ளது. மேலும் இதுவரையிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,46,759 ஆக அதிகரித்துள்ளது. அனைவர்க்கும் ஆறுதலளிக்கும் வகையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,89,232 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14,77,799 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.