இந்தியாவில் புதிதாக 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 464 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் புதிதாக 464 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம்:
இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,643 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,56,757 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களும் தடுப்பு பணிகளை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு..! 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் – சுதந்திர தின விழா ஒத்திகை!
அதனை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. புதிதாக 464 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் 60 வயதை கடந்தவர்கள் அதிகம் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை மொத்த உயிரிழப்புகள் 4,26,754 ஆக உள்ளது. இந்த கொரோனா தொற்றால் ஏராளமான குடும்பங்கள் தங்கள் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
எனவே மத்திய, மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 49,53,27,595 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 41,096 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,15,844 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 4,14,159 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.