இந்தியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 562 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 562 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிர வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இதனை விரைவாக அனைத்து மக்களுக்கும் செலுத்துவதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது.
WhatsApp செயலியின் புதிய View Once அம்சம் – இந்த வாரம் அறிமுகம்!
அதன் பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 62,53,741 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 48,52,86,570 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,625 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றைய பாதிப்பை விட 12,076 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை நாட்டில் 3,17,69,132 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 562 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,25,757 ஆக உயர்ந்துள்ளது. கொரோனவிலிருந்து ஒரே நாளில் 36,668 பேர் மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,33,022 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு 4,10,353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.