இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா – 373 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 373 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தபட்டு வருகிறது. நேற்று மட்டும் 54,91,647 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 51,45,00,268 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ஜூலை மாதத்தில் 1.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – புதிய தகவல்!
அதனை தொடர்ந்து உயிரிழப்புகளும் இன்னும் குறையவில்லை. நேற்று மட்டும் புதிதாக 373 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நாட்டின் பலி எண்ணிக்கை 4.28 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மக்கள் முடிந்த அளவு விரைவாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மற்றொரு புறம் நேற்று ஒரே நாளில் 41,511 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,88,508 கொரோனா நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரங்களை விட சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த தாக்குதலாக மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.