இந்தியாவில் ஒரே நாளில் 493 பேர் உயிரிழப்பு – புதிதாக 36,083 பேருக்கு கொரோனா தொற்று!
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 36,083 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவிக்காமல், தொற்று நிலவரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மாநில / யூனியன் பிரதேச அரசுகள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்தது. இவற்றின் விளைவாக தற்போது ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
75வது சுதந்திர தினம் – கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் முக ஸ்டாலின், ஓய்வூதியம் அதிகரிப்பு!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 36,083 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,21,92,576 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 37,927 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது சற்று நிம்மதி அளிக்கும் தகவலாக உள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,13,76,015 ஆக உள்ளது.
ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் 3,85,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா உயிரிழப்புகள் விகிதம் 1.34%, குணமடைந்தோர் விகிதம் 97.46% மற்றும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.20% ஆக உள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 54,38,46,290 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.