தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!

0
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் – கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் கொரோனாவால் பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்றால் பாதிக்கபட்டவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

இதையடுத்து கொரோனா அறிகுறியால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வீட்டை விட்டு வெளி வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் 3 மண்டல ஆணையர் கட்டுப்பாட்டில் தலா 50 படுக்கைகள் வீதம் 150 படுக்கைகள் கொண்ட கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னையில் கொரோனா பரிசோதனையை 5000 ஆக உயர்த்த வேண்டும். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதற்கு சுகாதாரத்துறை பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!