தமிழகத்தில் மினி பேருந்து கட்டணம் உயர்வு? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் மினி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என மினி பேருந்துகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மினி பேருந்து
தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களுக்கு பயணிக்க வசதியாக மினி பேருந்து திட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி இந்த மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் 16 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கிய சாலைகளிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 4.092 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மினி பேருந்துகளின் கட்டணம் இதுவரை உயர்த்தப்படவில்லை. தற்போது அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள மினி பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மினி பேருந்துகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மினி பேருந்துகளின் பயண தூரத்தை சிறிது அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Whatsapp பயனர்கள் கவனத்திற்கு.. இதோ புது அப்டேட் – முழு விவரம்!
மேலும் மினி பேருந்துகளின் பயண தூரம் அதிகரித்தால் தனியார் பேருந்துகள் பாதிக்கப்படும் என தனியார் பேருந்து சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தற்போது போக்குவரத்துத்துறை மினி பேருந்து திட்டத்தை மறுவரையறை செய்துள்ளது. இதில் மினி பேருந்துகளின் கட்டணம் உயர்வு, அதிக தூரம் செல்வதற்கு ஊக்கத்தொகை மற்றும் சிறிது தூரம் செல்ல அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.