தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சேர்க்கை
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த வண்ணம் உள்ளது. அதனால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் நடப்பு கல்வியாண்டு முதல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் மூலமாக மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு அல்லது 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக பட்டயபடிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு பள்ளிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு? முதன்மை செயலாளர் கடிதம்!
அதனால் நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2022-2023ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மேலும் இது தொடர்பாக கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா கூறியிருப்பதாவது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு ஆண்டில் புதிதாக 17000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.