உணவு பொருள் விநியோக நிறுவனங்களின் சோதனை – வருமான வரித்துறையினரின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வழங்கி வரும் அருணாச்சலம் இம்பேக்ஸ் உள்ளிட்ட 5 நிறுவன கிடங்குகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பிற மளிகை பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக ரேஷன் கடைகள் வாயிலாக 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்து குறித்து ஆய்வு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கிய ஒப்பந்த நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் தரமற்ற பொருட்கள் வழங்கிய சில நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் விநியோகிக்கும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
G – மெயிலில் இவ்வளவு அப்டேட்டா? பயனர்களுக்கான எளிய டிப்ஸ்! மிஸ் பண்ணாம படிங்க!
Follow our Instagram for more Latest Updates
அதனால் வருமான வரித்துறையினர் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் காமாட்சி அண்ட் கோ நிறுவனம் மற்றும் ஹீரா டிரேடர்ஸ், பெஸ்ட் டால் மில், இண்டகிரேட் சர்வீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.