தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை நீட்டிப்பு – அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவது 10ம் வகுப்பு வரை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும்.
கல்வி ஊக்கத்தொகை:
தமிழகத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அரசு ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் நகர்ப்புற, கிராமப்புற பெண் குழந்தைகளும் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் கல்வி ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு கிடைக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாடும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்கி கல்வி பயில்வது என்பது கிராமப்புற மாணவர்களுக்கு இயலாத காரியமாக உள்ளது.
ஜூலை 31 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் ஏராளமான மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக வேலைகளுக்கு சென்று விட்டனர். குறிப்பாக கிராமப்புற பெண் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் படிப்பை நிறுத்தி விட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை நீட்டிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.