ஜூலை 31 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கேரளாவில் வருகிற ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த தயங்கிய மத்திய அரசு, பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த மே மாதம் முதலே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 43,509 பேருக்கு கொரோனா உறுதி – 640 பேர் பலி!
இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சத்தின் காரணமாக மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளன. இந்நிலையில் கேரள மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளதால், இயல்பு நிலை திரும்பி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் வார இறுதி (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி முழு ஊரடங்கு அமலாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளிய செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.