அண்ணா பல்கலைக்கழகத்தில் APJ அப்துல் கலாம் திருவுருவ சிலை – முதல்வர் முக ஸ்டாலின் திறப்பு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் APJ அப்துல் கலாம் திருவுருவ சிலை – முதல்வர் முக ஸ்டாலின் திறப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டாக்டர் APJ அப்துல் கலாம்:

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பை முடித்து இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் பல்வேறு சாதனைகளை படைத்தவர் APJ அப்துல் கலாம். இந்திய விண்வெளி துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. விண்வெளி துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது திறமையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு ‘பத்ம பூஷன்’ விருதை வழங்கியுள்ளது. அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பதவி ஏற்று மக்களுக்காக பணி செய்தார்.

கனமழை காரணத்தினால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.21,95,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் 7 அடி வெண் திருவுருவ சிலையை இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!