தமிழகத்தில் முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு - அமைச்சர் தகவல்!தமிழகத்தில் முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் 60 வயதை கடந்த முதியோர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாதந்தோறும் ரூ.1000 உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

உதவித்தொகை:

தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அவை முறையாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் முதியோர் உதவித்தொகை திட்டம். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 வயதை கடந்த முதியோர்கள், ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். தனது முதுமைக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த தொகை பெரிதும் உதவுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற சில தகுதிகளும் நிபந்தனைகளும் உள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் இதில் தகுதியற்ற பலர் போலி விவரங்களை கொடுத்து பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்து வந்தது. விதிமீறி வசதி படைத்தவர்கள் முதியோர் உதவித்தொகை பெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் தகுதியற்றவர்கள் பயன்பெறுவது கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அரசின் நிதி நிலை சீரான பிறகு முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

RBI வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம்!

மேலும் மத்திய அரசிடம் பேரிடர் நிதி நமது தேவையை பொறுத்தே கேட்டுள்ளோம். ஆனால் போதிய நிதி வழங்கப்படவில்லை பேரிடர் நேரத்தில் மாநில நிதியை செலவழித்து அரசு நடவடிக்கை எடுத்து தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியது. தற்போது மாநில நிதியை கொண்டு செலவழிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் இந்த தொகை ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 1000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் ரூ. 1500 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!