தமிழகத்தில் முகக்கவசம் அணியாதோர்க்கு ரூ.500 அபராதம் – திடீர் கட்டுப்பாடு விதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முகக்கவசம்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசின் தரப்பில் இருந்து அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கொரோனா தொற்று குறைவதாக தெரியவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால், பெரும்பாலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது, அரசு விழாக்கள், திருமணம், திருவிழா, மால்கள், கோவில்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தவிர்க்கமுடியாத பட்சத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஆதாருடன் பான் கார்டை இணைக்க ரூ.1000 அபராதம் – செலுத்துவது எப்படி? முழு விவரங்களுடன்!
இதனால், கொரோனா பரவுதலை கருத்தில் கொண்டு கட்டாயமாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பாக சென்னையில் தான் கொரோனா பரவுதலின் வேகம் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.