தமிழகத்தில் பல இடங்களில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
டீசல் தட்டுப்பாடு:
தமிழகத்தில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையின் தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர்
அந்த வகையில் சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள எழும்பூர், பலசரவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, அடையாறு, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் இல்லை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது
திருப்பதி கோயிலின் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
அதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் டீசல் சப்பளை கிடைக்காமல் இருப்பதால் தட்டுப்பாடு நிலவுவதாக டீசல் முகவர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது சென்னை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்