திருப்பதி கோயிலின் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக இலவச தரிசனம், அங்கபிரதட்சணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து வருகிற 27ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா வருகிற 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவின் 5வது நாள் கருடசேவை நடைபெற உள்ளது. இவ்விழாவின் போது உற்சவர் மலையப்ப சுவாமிக்கு குடை அலங்காரம் வெகு சிறப்பாக செய்யப்படும். ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலையப்பசாமிக்கு சமர்ப்பிப்பதற்காக பிரத்யேக குடைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வருவார்கள்.
தமிழகத்தில் அரசு விரைவு பேருந்து கட்டணத்தில் 10% சலுகை – அமைச்சர் அறிவிப்பு!
இந்த குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் யாரும் காணிக்கை போடக்கூடாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏனெனில் குடை ஊர்வலத்தின்போது பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் முழுவதுமாக திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றவடைதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊர்வலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளுக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் அதனால் பக்தர்கள் தங்களின் காணிக்கையை கோவிலுக்கு வந்து செலுத்துபடி கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்