தமிழகத்தில் வீடு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தற்போது அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அதனை சமாளிக்க நில அளவை விவகாரத்தில் அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
அரசு வெளியிட்ட அதிரடி முடிவு:
தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை உள்பட்ட பல்வேறு நகரங்களில் வீடு மனை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வீடு மனைக்கான பத்திரம் மாற்றுவோர் கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலவியர்கள் போதிய அளவில் தமிழகத்தில் இல்லாததால் இதன் பணிகள் தொய்வடைந்து உள்ளதாக தெரிகிறது.
எனவே தற்போதைய நிலவரப்படி 1231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தாலுகா அளவில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் இனி பட்டா பெயர் மாற்றம் செய்ய கால தாமதம் ஏற்படாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் லஞ்சமே வாங்க முடியாத அளவிற்கு வெளிப்படை தன்மையையும் விதிமுறைகளையும் அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.