வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு – மீறினால் விநோத தண்டனை!
ஜப்பான் நாட்டில் தற்போது கொரோன தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு விநோத தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
ஜப்பான் நாட்டில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், ஜப்பான் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு தீவிர கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
விரைவில் 50 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி இந்தியா – பிரதமர் மோடி அறிவிப்பு!
நேற்றைய நிலவரப்படி, ஜப்பானில் புதிதாக 8,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திடீரென்று பாதிப்புகள் இருமடங்காக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் பொதுவெளியில் அவர்களது பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறிய செயல்பட்ட 3 வெளிநாட்டவரின் பெயரை சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுவெளியில் அறிவித்துள்ளது.