விரைவில் 50 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி இந்தியா – பிரதமர் மோடி அறிவிப்பு!

0
விரைவில் 50 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி இந்தியா - பிரதமர் மோடி அறிவிப்பு!
விரைவில் 50 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி இந்தியா - பிரதமர் மோடி அறிவிப்பு!
விரைவில் 50 கோடி தடுப்பூசி இலக்கு நோக்கி இந்தியா – பிரதமர் மோடி அறிவிப்பு!

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் பல முக்கிய விஷயங்களை குறித்தும் உரையாடினார்.

பிரதமரின் உரை:

பிரதமர் மோடி அவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் அடிக்கடி நாட்டு மக்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் பலனடையும் மக்களுடன் இன்று பிரதமர் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன் பெறுகின்றனர்.

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.300 ஆக உயர்வு? அமைச்சர் தகவல்!

மலிவு ரேஷன் திட்டங்களுக்கான நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஆனால், அதன் தாக்கம் குறைவாக இருந்திருக்க வேண்டும். நாட்டின் உணவு தானிய இருப்பு தொடர்ந்து அதிகரித்தது. ஆனால், அந்த அளவுக்குப் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறையவில்லை. பயனுள்ள விநியோக முறை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இதனால், கடந்த 2014ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதற்காக, ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டது. பெருந்தொற்று நேரத்தில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு, ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் இலவச ரேஷன் வழங்கப்பட்டது. இன்று கோதுமை கிலோ ரூ.2க்கும் அரிசி கிலோ ரூ.3க்கும் வழங்கப்படுவதோடு, 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி ஒவ்வொரு பயனாளிக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, புலம் பெயர் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டதற்கு குஜராத் அரசைப் பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

e-RUPI என்றால் என்ன? – முழு விவரங்கள் இதோ!

மேலும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நமது தடுப்பூசி திட்டத்திலும் மக்கள் நம்பிக்கையுடன் ஈடு பட வேண்டும். 50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் கூட்டத்தில் இருப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். நாட்டை மேம்படுத்த, புதிய எழுச்சியை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவில், இந்தத் தூய உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!