முக்கிய திட்டங்கள் – ஜூலை 2018

0

முக்கிய திட்டங்கள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் முக்கிய திட்டங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

 PDF பதிவிறக்கம் செய்ய

முக்கிய திட்டங்கள் – ஜூலை 2018:

ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் 2018

  • குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் 2018 (SSG 2018) புது டெல்லியில் தொடங்கியது. தேசிய அளவிலான ஆய்வில், கிராமப்புற இந்தியாவின் தூய்மையான மற்றும் அசுத்தமான இடங்களை வரிசைப்படுத்தும், மாவட்டங்கள் தரம் மற்றும் அளவு மதிப்பீடு அடிப்படையில் தரவரிசையில் பட்டியலிடும்.

பேட்டி பச்சோ-பேட்டி பதாஓ: எம்.பி. அரசு, பெண்களை மாவட்ட பிராண்ட் தூதராக நியமிக்கப்படவுள்ளது

  • மத்தியப்பிரதேசத்தில், முதல்முறையாக, மாநில அரசு, பேட்டி பச்சோ-பேட்டி பதாஓ திட்டத்தின் கீழ் எந்த துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை பதிவு செய்த பெண்ணை மாவட்ட பிராண்ட் தூதராக நியமிக்கவுள்ளனர்.

சாகர்மாலா திட்டம்

  • கடல்சார் மற்றும் கப்பல் கட்டுதலில் (CEMS) சிறப்பான மையம், கடல்வழி மற்றும் கப்பல் கட்டுப்பாட்டு துறை திறன் அபிவிருத்தியில் நன்கு நிதியளிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் விசாகப்பட்டினத்தில் அதன் ஹைடெக் ஆய்வகங்கள் பயிற்சியாளர்களுக்கு தொடக்க நோக்குநிலை திட்டங்களை விளக்கத்தயாராக உள்ளன என்று அறிவித்துள்ளது.

“ஆங்கிலம் எனக்கு பயம் இல்லை” திட்டம்

  • ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான “ஆங்கிலம் எனக்கு பயம் இல்லை” திட்டத்தை ஹரியானா தொடங்குகியது. மாணவர்கள் 1-ம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேசவும் அவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களின் திறனை வளர்ப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியா பிபிஓ ஊக்குவிப்பு திட்டம்

  • மத்திய அரசின் இந்தியா பிபிஓ ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ விரைவில் மைசூரில் தனது பிபிஓ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகளுக்கு பரிந்துரைக்கப்படும் திருத்தங்கள்

  • தேசிய உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டண வசூல் மற்றும் வாகன கண்காணிப்பு முறை கட்டாயமாக்கப்படுதல்.
  • ஓட்டுனர் உரிமம் மற்றும் இதர சான்றிதழ்களின் டிஜிட்டல் வடிவமைப்பு முறைக்கு அனுமதி.
  • புதிய வாகனங்களை பதிவு செய்ய தகுதி சான்றிதழ் தேவையில்லை.

 “கங்கா வ்ரிக்ஷரூபன் அபியான்”

  • சுத்தமான கங்கைக்கான தேசிய நோக்கம் (NMCG) “கங்கா வ்ரிக்ஷரூபன் அபியான்” கங்கை நதிகள் பாயும் ஐந்து மாநிலங்கள் – உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் இயங்குகிறது.

மாணவர் காவல் படைத் திட்டம்

  • மாணவர் காவல் படைத் திட்டம் நாளை (21.07.2018) நாடெங்கும் தொடங்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!