தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள், அலுவலர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவ தொங்கியது. அதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கிய நிலையில் பள்ளிகளை திறந்து தலைமை ஆசிரியர்களை வரவழைத்து பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பல ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்தாலும் வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
CA தேர்வு மைய வழிகாட்டு நெறிமுறைகள் – ICAI வெளியீடு!
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் ஜூன் 14 ஆம் தேதி பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் கொரோனா தடுப்பூசியை ஜூன் 20 ஆம் தேதிக்குள் செலுத்தி கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் மேலே குறிப்பிட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் தாமதம் காட்டாமல் இப்பணியை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.