TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சில பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவுப்‌ பணியில்‌ அடங்கிய கூட்டுறவுத்‌ தணிக்கைத்துறையில்‌ உதவி இயக்குநர்‌ பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வானது 30.04.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் 493 பேர் கலந்து கொண்டனர். இதில் 24 பேர் அடுத்த கட்டமாக நடைபெறும் செயல் முறை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வானது 31.10.2022 அன்று நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பணிகளில்‌ அடங்கிய நகர்‌ ஊரமைப்பு உதவி இயக்குநர்‌ பதவிக்கு தேர்வானது 28.05.2022 அன்று நடைபெற்றது. 29 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை 1293 பேர் எழுதியுள்ளனர். அதில் 56 பேர் அடுத்த கட்டமாக 01.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

அதிர்ச்சி தகவல்! கொத்து கொத்தாக வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள் – முன்னணி நிறுவனம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு சீர்த்திருத்த பள்ளிகள்‌ மற்றும்‌ ஒழுக்க கண்காணிப்பு பணிகள் அடங்கிய பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வானது 19.06.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் 2187 பேர் கலந்து கொண்டனர். இதில் 46 பேர் அடுத்த கட்டமாக நடைபெறும் செயல் முறை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வானது 31.10.2022 அன்று நடைபெற உள்ளதாக தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!