தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி தொடர்பான விவகாரத்தில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள்(விஏஓ) போட்ட மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
தமிழ்நாட்டில் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்று அந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்தவித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என்று கூறியுள்ளனர். இதை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. அதனை தொடர்ந்து, நில அளவை பணிகளை அந்த பணியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எந்தவித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இரண்டு பதவிகளுக்கும் அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்புதான். நில அளவை பணிகளை மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
DFCCIL நிறுவன காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்..!
அதனை தொடர்ந்து, சர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்த 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதனை விரைந்து வழங்கும் வகையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசின் உத்தரவை எதிர்த்து சங்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்களின் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.