மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்ட பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வட்டி விகிதம் அதிகரிப்பு!
மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்நிலையில் இந்த திட்டத்தின் வட்டி உயர இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
சேமிப்பு திட்டம்:
மத்திய அரசு பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் பணம் சேமிக்க பல சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பலர் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் போஸ்ட் ஆபீஸ், பொதுத்துறை வங்கியின் மூலமாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 7 & Group 8 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய தேர்வுகள் இதோ!
இந்நிலையில் இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு வருகிற ஜூலை மாதம் முதல் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. pf,nsc, ssy இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த அறிவித்த பின் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி ஒரு மாதத்தில் 90 புள்ளிகள் ரெப்போ விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் ஜூலை 1 முதல் பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி போன்ற அரசு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020-21முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் 022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான இந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.