அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இது கட்டாயம்! உடனே பண்ணுங்க!
இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக ரேஷன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் – ஆதார்
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமில்லை பிற வேலைகளும் பயன்படுகிறது.
இந்த நிலையில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். ஆன்லைன் மூலமாகவும், ஆப்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்கலாம். இவ்வாறு ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே அரசின் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு மூலம் வெளிமாநில தொழிலார்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற முடியும். மற்ற மாநிலங்களில் தங்கி பணி புரியும் தொழிலார்களர்க்ளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- uidai.gov.in இணையத்தளத்தில் “இப்போது தொடங்கு” என்பதை கிளிக் செய்து மாவட்டம், மாநிலம் உள்பட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பின்னர் “ரேஷன் கார்டு” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- படிவத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி வரும். அதன் பிறகு அதன் பிறகு, விண்ணப்பித்தால் வெற்றிகரமாக இருந்தது என்ற அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும்.
- உங்கள் விண்ணப்பம் உடனடியாக சரிபார்க்கப்படும். வழங்கப்பட்ட விவரங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.