இந்திய ஐடி ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – க்ரீன் கார்டு தளர்வுகள்!
அமெரிக்காவில் க்ரீன் கார்டு வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தளர்வுகளை அளித்து அந்நாட்டின் அதிபர் ஜோபைடன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் இந்திய ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
புதிய தளர்வுகள்:
அமெரிக்காவில் இதற்கு முன்னர் இருந்த டிரம்ப் அரசு பல நாடுகளுக்கும் விதித்திருந்த கட்டுப்பாடுகளை ஜோபைடன் புதிய அதிபராக வந்த பிறகு நீக்கியுள்ளார். ஹெச்1பி விசா வழங்குவதற்கு டிரம்ப் தலைமையிலான அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு புதிய அரசு பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
க்ரீன் கார்டு வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளது. அங்கு வெளிநாட்டினருக்கு தங்களது வேலையை முதன்மையாக வைத்து குடியுரிமை வழங்குவதற்கான வசதிகள் உள்ளது. முன்னதாக ஒவ்வொருவருக்கும் குறிப்பட அளவில் மட்டுமே க்ரீன் கார்டு வழங்கும் கட்டுப்பாடுகள் இருந்தது.
18 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு? மாநில அரசு குளறுபடி!
தற்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து Bipartisan Legislation அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இப்புதிய சட்டத்தின் மூலம் அதிகளவில் நன்மை அடையபோவது இந்தியர்கள் தான், காரணம் அதிகளவிலான இந்திய ஐடி ஊழியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக ஒரு நாட்டுக்கு 7% அளவில் மட்டுமே க்ரீன் கார்டு வழங்க அனுமதி இருந்தது. இந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்படும் பட்சத்தில் க்ரீன் கார்டு தகுதியுள்ள அனைவர்க்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.