TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு!
தமிழக அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகளை திருத்திக் கொள்ள தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
அரசு வேலை கனவுடன் இருக்கும் பலர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் விண்ணப்பித்து அதன் மூலம் பணிகளில் சேருகின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஒரு சிலர் தவறுதலாக விண்ணப்பித்து விடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
தேர்வர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது தவறுதலாக விவரங்களை பதிவு செய்துவிடுகிறார்கள். அதனால் ஒரு சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் தேர்வாணையம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதில் ஏதாவது தவறாக பதிவு செய்தால் அதனை தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதிக்கு முன்னதாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு முன்னதாக கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 26ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் & அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – காரணம் இதோ!
அதனை பரிசீலனை செய்த தேர்வாணையம் விவரங்களை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்த போதும் அதனை மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது. அதன் படி இனிவரும் தேர்வு அறிவிப்புகளில் விண்ணப்பித்தவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதனை கடைசி நாளிற்கு முன்னதாக மாற்றிக் கொள்ளலாம் எனவும், கடைசி தேதியில் விண்ணப்பித்தவர்கள் கடைசி நாள் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது.
மேலும் விண்ணப்பதாரர்கள் விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது.