தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலுடன் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமைகளை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகளை அரசு அளித்து வருகிறது. அத்துடன் மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின் முடிவில் மாணவர்கள் மத்தியில் கணிதப் பாடங்களை படிப்பதில் ஆர்வமின்றி இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.
அத்துடன் இதற்கு முக்கிய காரணமாக கணிதப் பாடத்தை சுலபமான முறையில் ஆசிரியர்கள் நடத்தாமல் இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதனால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் ’மகிழ் கணிதம்’ என்ற பெயரில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முறையிலும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாகவும் இதில் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள கணித ஆசிரியர்கள் பங்கு பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.