PF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய குறிப்புகள்!
பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அவற்றை சரியாக செய்வதன் மூலம் எளிதாக பிஎப் தொகையை எடுக்கலாம். பிஎப் தொகையை எடுக்க நாம் மேற்கொள்ள வழிமுறைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிஎப்தொகை :
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனகல் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து பிடித்தம் செய்யப்படும். பிஎப் தொகையானது நாம் கண்ணனுக்கு தெரியாத சேமிப்பாகும். இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎப் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிஎப் கணக்குடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும், சம்பளம் பெறும் நபர் நாமினியை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு, முடிவுக்கு வரும் WFH – முக்கிய அறிவிப்பு!
கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனவால் மக்கள் வேலையிழந்து பொருளாதார நெருக்கடி நிலையில் ஏராளமானோர் பிஎப் தொகையை எடுத்தனர். இந்த பிஎப் தொகையின் வட்டி தொகை 8.5% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளை காட்டிலும் அதிகம். இதன் மூலம் பிஎப் பயனாளர் எதிர்காலத்தில் அதிக தொகையை வைப்பு நிதியாக பெற முடியும். இந்த நிலையில் பிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் பிஎப் தொகையை எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படும். பிஎப் தொகையை பெற உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் பிஎப் கோரி நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பி எப் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் :
- முதலில் epfindia.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று online service என்பதை தேர்வு செய்து claim என்ற செக்ஷனுக்கு செல்ல வேண்டும்.
- உங்கள் வங்கி கணக்கு புத்தகத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் என்ன காரணத்திற்காக நிதியை திரும்ப பெறுகிறீர்கள் என்பதையும் பதிவிட வேண்டும்.
- ன் ஆதார் அடிப்படையிலான OTP உருவாகி உங்களுக்கு அனுப்பபடும். அதனை டைப் செய்த பிறகு உங்கள் கோரிக்கை உங்கள் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.அதன் பிறகு பிஎப் தொகையை பெறலாம்.
- பிஎஃப் கணக்கில் இருந்து தொகையை எடுப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படும் காரணங்கள்:
- வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை அப்டேட் செய்யாமல் இருந்தால் ள் PF க்ளைம் நிராகரிக்கப்படும்.
- தெளிவற்ற முறையில் செக் லீஃப் அப்லோட் செய்தால் முழுமையற்ற KYC விவரங்கள் இருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பிஎப் தொகை வரும் கால அவாசகம் :
- பிஎப் தொகை பெறுவதற்கான கோரிக்கை உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். உங்கள் நிறுவனம் ஒப்புதல் அளித்ததிலிருந்து சுமார் 10 நாட்களுக்குள் அந்த தொகை உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் செலுத்தப்படும்.
It’s like