RBI வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் – இனி ‘KYC’ வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்?
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் KYC சரிபார்ப்பிற்காக இனி நேரடியாக செல்ல வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய விதிகள்:
வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பெயர், முகவரி, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்துக் வேண்டியது அவசியம். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். இந்த KYC சோதனைக்கு என்று இந்திய ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனம் வாயிலாக கற்றல் – அமைச்சர் துவக்கி வைப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி இனி, முகவரியில் எந்த வித மாற்றமும் இல்லாமல் பழைய முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் KYC சோதனைக்காக நேரடியாக வங்கிக்கு செல்ல தேவையில்லை என்றும், இதற்கு பதிலாக, தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம், இமெயில் அல்லது ONLINE இவற்றில் ஒன்றின் வழியாக Self Declaration செய்தால் போதும், வாடிக்கையாளர்களை வங்கிகள் நேரடியாக அழைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் முகவரி மாற்றம் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது புதிய முகவரிக்கான ஆவணத்தை வங்கிக்கு நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும்.