முக்கியமான நிகழ்வுகள் மே-31
உலக புகையிலை ஒழிப்பு தினம்
- உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31ம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
- புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
- இது ஒரு போதைப்பொருளாகும்.ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.
- புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன.
- உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
- உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
- புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.
வால்ட் விட்மன் பிறந்த தினம்
பிறப்பு:
- மே 31, 1819ல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
சிறப்பு:
- ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர்.
- அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
- இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார்.
- 1842ல் ஃபிராங்க்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார்.
- சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே லீவ்ஸ் ஆஃப் கிராஸ் உருவாகக் காரணமாயிற்று.
- அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார்.
- அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறப்பு:
- மார்ச் 26, 1892ல் இறந்தார்(வயது 72).
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |