முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-04
குல்சாரிலால் நந்தா பிறந்த தினம்
பிறப்பு:
- ஜூலை 4, 1898ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட்டில் பிறந்தார்.
சிறப்பு:
- இந்திய அரசியல்வாதியும்,தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார்.
- இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார்.
- 1964ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும்,1966ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
- இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார்.
- இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
அரசியல் கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்
இறப்பு:
- ஜனவரி 15, 1998ல் இறந்தார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்
பிறப்பு:
- ஜனவரி 12, 1863ல் கல்கத்தாவில் பிறந்தார்.
இயற்பெயர்: நரேந்திரநாத் தத்தா
தாய் மொழி: வங்காளம்
சிறப்பு:
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
- இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
- 1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
- நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர்.
- விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள்,எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
- தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள்,சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.
- இந்தியாவில், விவேகானந்தர் ஒரு தேசபக்தி துறவி என கருதப்படுகிறார் மற்றும் அவரது பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
விவேகானந்தரின் பொன்மொழிகள்:
- உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
- சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
- நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
- இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்:
- விவேகானந்தர் நினைவு மண்டபம்
- விவேகானந்த கேந்திரம்
- விவேகானந்தர் இல்லம்
- விவேகானந்தர் பாறை
இறப்பு:
- ஜூலை 4,1902ல் இறந்தார்.
மேரி கியூரி நினைவு தினம்
பிறப்பு:
- நவம்பர் 7, 1867ல் போலந்தில் பிறந்தார்.
சிறப்பு:
- புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.
- மேரி தான் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார்.
- இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903 & 1911ம் ஆண்டுகளில் பெற்றார்.(இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்)
- ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலங்களைக் கண்டுபிடித்தார்.
- பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரே ஆவார்.
- கதிரியக்கம்(இது இவர் உருவாக்கிய சொல்)பற்றிய ஓர் கோட்பாட்டை உருவாக்கினார்.
- கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும் இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தார்.
- இவரது வழிகாட்டுதலின் கீழ் உலகிலேயே முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- 1895ல் ரோஎன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார்.
- 1898ல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.
- 1896ல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார்.
- பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார்.
- 26 டிசம்பர் 1898ல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர்.
இறப்பு:
- ஜூலை 4, 1934ல் இறந்தார்.