10 & 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!
இந்தியாவில் CBSE 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் CBSE செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டது . அதனை அடிப்படையாக வைத்து அடுத்த வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிலையில் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய கல்வி வாரியம் திட்டமிட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பதில் இரண்டு கட்டமாக பருவத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கொள்குறி வகையில் 50 வினாக்கள் இடம்பெற்றிருந்து. ஒன்றை மணி நேரம் வழங்கப்பட்டு தேர்வு சிறப்பாக நடைபெற்றது. பிறகு மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு முடிவுகள் 2022 ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வந்தது.
இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்தது. அதனால் தேர்வுகள் வெளியாகுவதில் கால தாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் CBSE 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகுமா என்று கேள்வி எழுப்பிய போது அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட பொதுத்தேர்வு மார்ச் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.