திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நிர்வாக அதிகாரி வெளியீடு!
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானம்:
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக அரசு அனைத்து கடைகளும் திறக்க தடை விதித்துள்ளது. பரவி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கும் மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா பரவலால் பெரும்பாலான கோயிகள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் கோயிகள் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கோயில் பூஜைகள் மற்றும் சடங்குகள் போன்றவை பக்தர்கள் அனுமதியின்றி கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இன்று முதல் மாலை 6 வரை கடைகள் திறக்க அனுமதி – அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி!
தற்போது கொரோனா பரவல் காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் வருகை குறைவாக உள்ளது. கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள் கோவிலுக்கு வருகை தருவது இல்லை. இதனால் திருப்பதி தேவஸ்தானம் இரவு 8 மணியுடன் நடையை அடைக்க முடிவு செய்துள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவு ஏகாந்த சேவைக்கு பின் தேவஸ்தானம் மூடப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.