இன்று முதல் மாலை 6 வரை கடைகள் திறக்க அனுமதி – அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி!
குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் தளர்வுகளை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்:
குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,207 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,13,270 ஆக உள்ளது என்று நேற்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 17 பேர் தொற்று பாதித்து உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மாநிலத்தில் 9,890 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 24,404 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது ஜூன் 11ம் தேதி வரை அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி வரை ஜூன் 11ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் இன்று முதல் காலை 9 மணி முதல் 6 மணி வரை அனைத்து கடைகளும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திறக்க அனுமதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
இரவு 10 மணி வரை தினமும் உணவகங்களில் உணவு விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.