கோவை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி ஆணையர் வெளியீடு!
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாநகராட்சி ஆணையர் தொலைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக முகவரி ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
மாநகராட்சி அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 27 மாவட்டங்களில் குறைந்துள்ள நிலையில், மற்ற 11 மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில் தான் உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறைந்துள்ள மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புகள் அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
தமிழகத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைத்திட்டம் – அரசுக்கு வலியுறுத்தல்!
கோவை மாநகராட்சி பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்படாத காரணத்தால் அங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் நடமாடும் வண்டிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் அவர்களும் இணைந்து பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காகவும், கொரோனா தடுப்பு குறித்து கட்டுப்பாட்டு அறையில் புகார் அளிக்கவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், நடமாடும் காய்கறி வாகனங்களின் வரத்து மற்றும் அதிக விலை தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள், பேஸ்புக், டிவீட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான எண்கள் மற்றும் முகவரி குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.