தமிழகத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைத்திட்டம் – அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாக பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வைகோ அரசினை வலியுறுத்தி உள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் இதனை தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்பு திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம் மூலம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்படுகிறது . கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.7 கோடி பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தனர்.
10ம் வகுப்பு மதிப்பெண் இல்லாததால் அரசு வேலை பெறுவதில் சிக்கல்? மாணவர்கள் அச்சம்!
ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கின் காரணமாக 30 லட்சம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்கள், சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்களை நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்த கூடாது. 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பணி செய்யக் கூடாது. கொரோனா தீவிரமாக பரவும் காரணத்தால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என ஊராட்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தில் பெரும்பாலும் வயதானவர்கள் பங்கு பெறுகின்றனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த தொழில் இல்லாமல் 55 வயதுக்கு மேற்பட்டோர் வறுமையில் வாடுகின்றனர். தற்போது அரசின் தீவிர நடவடிக்கைகளாலும், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாலும் தொற்று குறைந்து வருகிறது. எனவே அரசு 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திஅவர்களை மீண்டும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.