தமிழக அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதில்’ தாமதம் கூடாது! அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் 2023ம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதனை அனைவரும் கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
மாற்று சான்றிதழ்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2021 – 2023ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன் படி 1 – 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மே 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இத்தேர்வானது மே 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14ம் முதல் அம்மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. அதனை தொடர்ந்து 10,11,12 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி முதல் 1 – 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்(TC) வழங்குவதில் தாமதமும், தடையும் இருக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC கோரினால், அவற்றை தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD க்கு புதிய வட்டி விகிதம்! முழு விவரம் இதோ!
மேலும் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி சேரும் மாணவர்களின் முந்தைய பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பித்த பிறகு, முறையாக பதிவேட்டில் பதிவு செய்து அவர்களின் மாற்று சான்றிதழை புதுப்பித்து கொள்ளலாம். கட்டாய கல்வி உரிமை( RTE) சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.