SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
நாடு முழுவதும் தற்போது சில காலங்களாக வங்கி கணக்குகளில் மோசடியாளர்கள் மூலம் நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நூதன மோசடி:
தற்போது வளர்ந்து விட்ட நவீன விஞ்ஞான உலகத்தில் அதிகளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி நிர்வாகமும் நேரடி பண பரிவர்த்தனைகளை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சமீப காலத்தில் வங்கி நிறுவனங்களை போன்று வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரபூர்வ எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – கோரிக்கை!
அதில், மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் / கால்கள் அல்லது லிங்க்குகள் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை எஸ்பிஐ கேட்காது என்றும் இது போன்ற வாடிக்கையாளர்களுக்கு மோசடியாளர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் உடனடியாக [email protected] அல்லது 155260 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஃபிஷிங் என்பது இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம், ஒரு நம்பகமான நிறுவனம் போன்று ஏமாற்றி பயனர் பெயர், பாஸ்வர்டுகள், PIN, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற தகவல்களை பெற முயற்சிக்கும் ஒரு வழியாகும்.
TN Job “FB Group” Join Now
தேவையற்ற அனைத்து லிங்க்குகளையும் வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த போலியான லிங்க்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கணக்கு விவரங்கள் திருடப்படும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எண், CVV, PIN நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. இது போன்ற தகவல்களை கேட்டு வரும் எஸ்எம்எஸ்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.